search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி கணக்கு மூலம் பணம் கேட்பதாக கலாநிதி வீராசாமி எம்.பி. கமிஷனரிடம் புகார்
    X

    போலி கணக்கு மூலம் பணம் கேட்பதாக கலாநிதி வீராசாமி எம்.பி. கமிஷனரிடம் புகார்

    • வடசென்னை பாராளுமன்ற உறுப்பினராக டாக்டர் கலாநிதி வீராசாமி பணியாற்றி வருகிறார்.
    • கலாநிதி வீராசாமி தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள் என தெரிவித்தார்.

    சென்னை:

    வடசென்னை பாராளுமன்ற உறுப்பினராக டாக்டர் கலாநிதி வீராசாமி பணியாற்றி வருகிறார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் இவரது பெயரில் போலி கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாநிதி வீராசாமி படமும் அதில் வைக்கப்பட்டுள்ளது. அதை உண்மை என நம்பிய சிலர் அந்த கணக்கில் இணைந்துள்ளனர்.

    திடீரென அந்த போலி கணக்கை ஆரம்பித்த மர்ம நபர் தனக்கு வங்கியில் சர்வர் பிராப்ளம் இருப்பதால் அவசரமாக பணம் தேவைப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி கூகுள் பே நம்பரை அனுப்பியுள்ளார். பலருக்கு இதுபோல் பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும், கலாநிதி வீராசாமி தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள் என தெரிவித்தார்.

    ஆனால் தொடர்ந்து போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இயங்குவதால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×