என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி
- டால்மியா காலனியில் சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- மருத்துவர் உமாதேவி மாணவர்களுக்கு சிறார் வன்கொடுமை குறித்து சிறப்புரையாற்றினா
டால்மியாபுரம்
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் டால்மியா காலனியில் சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
டால்மியா சிமெண்ட் ஆலய தலைவர் விநாயகமூர்த்தி உத்தரவின் பேரில் டால்மியா ரோட்டரி சங்கம் சார்பில் டால்மியா மேல்நிலைப்பள்ளி, டால்மியா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் இணைந்து சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியினை டால்மியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
டால்மியா ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கல்லக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் உமாதேவி மாணவர்களுக்கு சிறார் வன்கொடுமை குறித்து சிறப்புரையாற்றினார்.
பேரணியில் டால்மியா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மனோகர், ரவிக்குமார் ,கோபி மற்றும் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி சங்க பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டால்மியா ரோட்டரி சங்கத் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.






