கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
Published on

கவுண்டம்பாளையம்,

கோவை தடாகம் கனுவாய் பாரதி கார்டன் முதல் விதியை சேர்ந்தவர் முத்துகுமார் (35). தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 31).

சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய முத்துகுமார் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பிரியா தடாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வந்தனர்.

அப்போது வடவள்ளியை சேர்ந்த நண்பர்கள் டிரைவர் விக்னேஷ் (20), எலக்ட்ரீசியன் நிரஜ்சன் (22), ஆட்டோ டிரைவர் கண்ணன் (23), மற்றும் மாதேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நண்பர்கள் 4 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com