என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த வேளாண்மை   வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
    X

    சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரமத்தி வட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்–தம்பூர், நடந்தை, ராமதேவம் மற்றும் கோதூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் கோவிந்தன், மற்றும் வேளாண்மை துணை அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் வழங்கினர்.

    முகாமில் மானியத்துடன் கூடிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருட்களும் வழங்கப்பட்டது. கோதூர் மற்றும் ராமதேவம் வருவாய் கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் டாக்டர் கலைசெல்வி மற்றும் டாக்டர்அனிதா ஆகியோரால் கால்நடை–களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், ஆடுகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகள், ஆடு மாடுகளுக்கான நுண்ணூட்ட கலவை தூள்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    சிறப்பு முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஐன், பிரபு, கவுசல்யா, ரகுபதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சத்தியராஜ், நவநீதகிருண்னன் மற்றும் அட்மா அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தினர்.

    Next Story
    ×