search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நியாய விலை கட்டிடம் கட்ட வலியுறுத்தி  கிராம மக்கள் உண்ணாவிரதம்
    X

    கிராம மக்கள் உண்ணாவிரதம்

    நியாய விலை கட்டிடம் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரதம்

    • கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.
    • கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டிடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி இயங்கி வந்தது இதனை அடுத்து ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் ஒரு சிலர் அந்த இடத்தில் கட்டுவதற்கு ஆட்சபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது இதனை அடுத்து பொதுமக்கள் சார்பாக ஊராட்சி எந்த இடத்தில் அனுமதி வழங்கி மூலப்பொருள் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்திலேயே கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவிந்தன் தலைமை தாங்கினார்.

    வேதாரத்தினம், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், பாலசுப்ரமணியம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரங்கநாதன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி தந்த இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்பு வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின் பேச்சுவார்த்தை நடத்தியதில் உண்ணாவிரம் மாலைமுடித்து கொள்ளபட்டது.

    Next Story
    ×