search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் குடியிருப்புக்குள் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    தூத்துக்குடியில் குடியிருப்புக்குள் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • கடந்த மாதம் 12 அடி நீளத்திற்கு மலை பாம்பு போல ஒரு பாம்பு மிகப்பெரிய அளவில் வந்துள்ளது.
    • உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 58-வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகரில் உள்ள 4 தெருக்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 3-வது மற்றும் 4-வது தெருக்களில் கடந்த சில மாதமாக விஷ பாம்புகள் படையடுத்து வருவது அதிகரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். கடந்த மாதம் 12 அடி நீளத்திற்கு மலை பாம்பு போல ஒரு பாம்பு மிகப்பெரிய அளவில் வந்துள்ளது. இதனை கண்டு அங்குள்ள பகுதியில் ஒரு வீட்டில் வசிக்கும் பச்சைக்கிளி(வயது 35) என்பவர் தனது குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு அலறியுள்ளார்.

    உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். ஆனாலும் பாம்பு பிடிபடவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காந்திநகர் 4-வது தெருவில் உள்ள டிரைவர் சேகர்(39) என்பவரின் வீட்டில் உள்ள நாய் பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்திட வேண்டும் என்று காந்திநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×