என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை மாநகராட்சியில் அக்.31-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை- மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
- சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- இடையர்பாளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் முகாம் நடக்கிறது.
கோவை,
கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையா ண்டிற்கான சொத்து வரியினை 01.10.2023 முதல் 31.10.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமை தாரர்களுக்கு, சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனவே, பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை முதலிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த கீழ்க்கண்ட பகுதிகளில் 30.09.2023 மற்றும் 01.10.2023 ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடக்கிறது.
மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.56 மற்றும் 57 பகுதிகளுக்கு ஒண்டிபுதூர்-நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்திலும்,
மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 34ல் கவுண்ட ம்பாளையம் மணிமகால் பூம்புகார் நகர் பகுதியிலும், வார்டு 35ல் இடையர்பா ளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்திலும் இம்முகாம் நடக்கிறது.
தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான வார்டு 89ல் சுண்டக்கா முத்தூர் சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்திலும்,
வார்டு 97ல் கம்பீர விநாயகர் கோவில் வளாகத்திலும், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 குடியிருப்போர் சங்க கட்டிடத்திலும் இம்முகாம் நடைபெறுகிறது.
வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.11ல் ஜனதா நகர் சூர்யா கார்டன்ஸ் பகுதியிலும், வார்டு எண்.19ல் மணியக்காரன்பாளையம் அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25ல் காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இம்முகாம் நடக்கிறது.
மத்திய மண்டலத்தி ற்குட்பட்ட வார்டு 32ல் நாராயணசாமி வீதியிலும் வார்டு எண்.62ல் சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு 63ல் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், முகாம் நடக்கிறது.
மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்களிலும், மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரிகளை செலுத்தலாம். இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்தி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்ைகயில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்