search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ.55 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
    X

    காேப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ.55 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

    • 130 விவசாயிகள் கலந்து கொண்டு 68 ஆயிரத்து 40கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ரூ.55லட்சத்து 59ஆயிரத்து 909க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று செவ்வாய்கிழமை 130 விவசாயிகள் கலந்து கொண்டு 68 ஆயிரத்து 40கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 85.25க்கும், குறைந்தபட்சம் ரூ.68க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று முன் தினம் மொத்த ரூ.55லட்சத்து 59ஆயிரத்து 909க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    Next Story
    ×