search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாண்டமங்கலத்தில்சமூக விழிப்புணர்வு பிரசாரம்
    X

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் சோமசேகர் பேசிய போது எடுத்த படம்.

    பாண்டமங்கலத்தில்சமூக விழிப்புணர்வு பிரசாரம்

    • பொத்தனூர் பெரியார் படிப்பதத்தின் சார்பாக, பாண்டமங்கலம் கடைவீதியில் சமூக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பெரியார் படிப்பதத்தின் சார்பாக, பாண்டமங்கலம் கடைவீதியில் சமூக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் சோமசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெருமாள் என்கிற முருகவேல், பொத்தனூர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் அசேன் மற்றும் அன்பு செல்வகுமார், பகுத்தறிவாளர்கள், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோ, செயலாளர் வீர முருகன், திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×