search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கூட்டத்தில் கலெக்டர் சாருஸ்ரீ பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 233 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளி த்தனர்.

    அதனை அவர் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவல ர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கண்பார்வை குறைபா டுடைய மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.13,500 வீதம், பத்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×