

கடலூர்:
பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது மனைவி ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிவேதாவை தேடி வருகின்றனர்.