என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனியில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர்
- கணவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.
- போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், அவரது குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தரவி மனைவி அனுஷா(25). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 35 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனந்தரவிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் மனைவியை அடித்து துன்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் செயல்பட்டு வந்துள்ளனர்.
மேலும் அனுஷாவிடம் கூடுதலாக 20 பவுன் நகையும், ரூ.5 லட்சம் பணம் வாங்கி வரவேண்டும் என கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வீட்டைவிட்டு துரத்தியதால் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அனுஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஆனந்தரவி, அவரது குடும்பத்தினர் உள்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்