மனு அளித்த ஒரு வாரத்தில் 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா

மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி த்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 518 மனுக்கள் வரப்பெற்றன.6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
மனு அளித்த ஒரு வாரத்தில் 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா
Published on

தருமபுரி, 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி யும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி த்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 518 மனுக்கள் வரப்பெற்றன.

பாலக்கோடு வட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி கடந்த வாரம் 19.6.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்கி னார்கள். இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளமாறு சம்பந்த ப்பட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனடிப்படையில், இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாலக்கோடு வட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com