பழனியில் போகர் ஜெயந்திக்கு தடை விதித்தால் விபரீத விளைவுகள் - இந்து அமைப்பினர் எச்சரிக்கை

இந்த ஆண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பழனி:

பழனியில் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி போகர் ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும். போகர் ஜீவ சமாதியில் இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த விழாவை ஸ்ரீமத் போகர் ஆதீனம் பாத்திரசாமி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணை ஆணையர் நடராஜன், போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போகர் ஜெயந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தெரிவிக்கையில்,

போகர் சமாதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தடை விதிக்க ப்பட்டது ஏன்? என்பது பக்தர்கள் அதிர்ச்சியடை ந்துள்ளனர். பழனி மலையில் அமைந்திருக்கும் போகர் ஜீவ சமாதியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களுடைய காணிக்கையை செலுத்த அங்கே உண்டியல் வைக்க வில்லை. ஆனால் பழனி முருகன் கோவில் உண்டியலில்தான் காணி க்கை செலுத்துகி ன்றனர்.

போகர் ஜெயந்தி விழா நிறுத்தப்பட்டால் அதுவும் ஆகம விதி மீறல்தான். ஆகம விதி மீறல் நடந்தால் அது ஆட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் பழனி கோவில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமி சிலை வடிவமைத்த போகருக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்டாயுதபாணி சுவாமியின் கோபத்திற்கும் கட்டாயம் ஆளாக நேரிடும். கடந்த ஆண்டும் இதே போல போகர் ஜெயந்தி விழா நடத்தக்கூடாது என்பதற்காக இடையூறு ஏற்படுத்தினர்.

சித்தர் வழிபாட்டை நிறுத்த முயற்சிகள் மேற்கொ ள்ளக்கூடாது எனவே தடை விதிப்புக்கு எதிராக வருவாய் கோட்டாட்சியரி டம் மனு அளித்துள்ளோம். இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பக்தர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், போகர் ஜீவசமாதி கோவில் புலி ப்பாணி ஆசிரமம் கட்டுப்பா ட்டில்தான் தற்போது வரை உள்ளது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறையும், பழனி கோவில் நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

இது முற்றிலும் சட்டத்துக்கும், ஆன்மீகத்துக்கும் எதிரானது. போகருக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் தண்டாயு தபாணி சுவாமியின் கோப த்துக்கு ஆளாக நேரிடும். தமிழக அரசும், இந்து சமய அறநிலை யத்துறையும், பழனி தேவஸ்தானமும் கடந்த ஆண்டைப்போலவே வருகிற 18-ந் தேதி போகர் ஜெயந்தி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com