என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 7 இடங்களில் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம்
- பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியாளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.
- சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சின்னமனூர்:
உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள ஹைவே விஸ் பேரூராட்சியில் மேக மலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா ெமட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 895 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.
தமிழக அரசு அறிவித்து ள்ள மகளிர் உரிமை த்தொகை பெறுவதற்கான திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேனி மாவட்ட த்தில் 24 -7 -2023 முதல் 4-8 -2023 வரை முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் வரும் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளடக்கிய 7 கிராமங்க ளுக்கும் முதற்கட்ட முகா ம்கள் பேரூராட்சி அலுவலக த்தில் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுதாக இருந்தது. பேரூராட்சியில் உள்ள ஏழு கிராமங்களும் 10 முதல் 15 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் வாகன போக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனைத் ெதாட ர்ந்து இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. பேரூர்செயலாளர் கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் கவன த்துக்கு கொண்டு சென்ற னர். கலெக்டர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியா ளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.
மேலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விண்ணப்ப பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்