search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஹைடெக் விழா
    X

    ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஹைடெக் விழா நடந்த போது எடுத்தபடம்.

    வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஹைடெக் விழா

    • சமூகரெங்கபுரத்தில் உள்ள வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஹைடெக் விழா நடத்தப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான ஹைடெக் விழா போட்டிகள் அறிவியல் படைப்பு, காய்கறிகளில் இருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஊமை நாடகம், கோலப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஆடை அலங்கார போட்டிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஹைடெக் விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ஹைடெக் விழா போட்டிகள் அறிவியல் படைப்பு, காய்கறிகளில் இருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல், ஊமை நாடகம், கோலப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஆடை அலங்கார போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். விழாவை கல்லூரியின் தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட கல்வி அலுவலர் பாலன் ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆயர் இல்ல செயலர் ஜெயந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 8 -ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியனாக ஜுனியர் பிரிவில் விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், பெரியதாழை லிட்டில் பிளவர்ஸ் உயர்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு இந்து உயர்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சீனியர் பிரிவில் நவ்வலடி டி.எம்.என்.எஸ். எஸ்.ஏ. மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், தெற்கு கள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    கல்லூரியின் துணை முதல்வர் விமலா வரவேற்று பேசினார், கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் போட்டியில் பங்குபெற மாணவர்களை ஊக்கப்படுத்திய அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் டி.டி.என் கல்வி குழுமத்தின் சார்பாக களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், ஆனைக்குளம் டி.டி.டி.ஏ நடுநிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக கணினி மற்றும் பிரிண்டர் வழங்கப்பட்டது.

    கலந்து கொண்ட முடிவில் அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்ப ட்டது. 804 மாணவ -மாணவி யர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×