என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாட்ஜில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது
- தினமும் சூர்யகுமார் சிறுமியிடம் செல்போனில் பேசியுள்ளார்.
- சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சூர்யகுமார் (வயது 23). இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது.
தினமும் சூர்யகுமார் சிறுமியிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சூர்யகுமார், சிறுமியிடம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று ஆசைவார்த்தை கூறி ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை தங்க வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், ஒட்டன்சத்திரம் விரைந்து சென்று சூரிய குமாரையும், சிறுமியையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் சூர்யகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் சூர்யகுமார் மீது போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்