search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்ஜில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது
    X

    லாட்ஜில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது

    • தினமும் சூர்யகுமார் சிறுமியிடம் செல்போனில் பேசியுள்ளார்.
    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சூர்யகுமார் (வயது 23). இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது.

    தினமும் சூர்யகுமார் சிறுமியிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சூர்யகுமார், சிறுமியிடம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று ஆசைவார்த்தை கூறி ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை தங்க வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், ஒட்டன்சத்திரம் விரைந்து சென்று சூரிய குமாரையும், சிறுமியையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அதில் சூர்யகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் சூர்யகுமார் மீது போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    Next Story
    ×