search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்
    X

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்

    • 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ம் தேதி தொடங்குகிறது.
    • 24-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நேற்று தொடங்கியது.

    அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் வினியோகிக்கப்படும்.

    அரையாண்டுத் தேர்வு 23-ம் தேதி முடிவடைந்தவுடன் 24-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. ஜனவரி 2-ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கும் 3-வது பருவத்தேர்வு தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    Next Story
    ×