search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
    X

    புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை படத்தில் காணலாம்.

    பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

    • மழையால் புல்லா வெளி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
    • இப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அழகாகவும் அமைதியாகவும் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெரும்பாறை, கானல்காடு, மஞ்சள்பரப்பு, நல்லூர்காடு, தடியன்கு டிசை, குப்பம்மாள்பட்டி, கல்லக்கிணறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் புல்லா வெளி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. இப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அழகாகவும் அமைதியாகவும் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    இந்த அருவிக்கு ஏரா ளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், வத்தல குண்டு, தேனி உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த ஏராள மானோர் கார், வேன், ஜீப், மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்து அருவியை பார்த்து ரசிப்ப தோடு குளித்து மகிழ்கின்றனர்.

    Next Story
    ×