search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வழிமுறைகள்
    X

    மழைநீர் தேங்கியுள்ள வயலை வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் பார்வையிட்டார்.

    பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வழிமுறைகள்

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மழைகாலத்தில் நெற்பயிர்களை பாதுகாக்கலாம்.
    • மகசூல் இழப்பை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவ மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்ச ரிக்கை நடவடி க்கை குறித்து சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-

    தற்போது பருவ மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ங்களிலும் மிதமானது முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள விவசாயிகள் சில பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு விவசாயிகள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

    மழைநீர் சூழ்ந்துள்ள நெல் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும். நீரில் மூழ்கிய நெற்பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்து வயல்களில் தண்ணீர் வடிந்தவுடன் இடவேண்டும். மேலும் போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து மகசூல் இழப்பை தவிர்த்திட கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×