search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோர்ட் சாலையில் உள்ள செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.

    எனவே தஞ்சை நகர கோட்டத்திற்குட்பட்ட தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகா லனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங்யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பா ளையம் சாலை, சிங்கபெரு மாள்கோவில், ஜெபமா லைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்து க்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×