search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தலூர் அருகே ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்ப்பு முகாம்
    X

    பந்தலூர் அருகே ஆதிவாசி கிராமங்களில் குறைதீர்ப்பு முகாம்

    • முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.
    • நடைபாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே படச்சேரி, முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்த குறை தீர்ப்பு முகாம் நடைெபற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    பந்தலூர் தாசில்தார் நடேசன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, திருஞானசம்பந்தம், வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திர குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். சாலை, நடைபாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×