search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மோதல்
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மோதல்

    • டைமிங் பிரச்சினையில் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு அரசு ஏ.சி. பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் ெதாடர்ந்து சாதாரண அரசு பஸ்சும் அடுத்து புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் ஏ.சி. பஸ் டிரைவர் தாமதமாக பஸ்சை எடுத்துள்ளார்.

    இதனை சாதாரண பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தட்டிக்கேட்டு ள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவரு க்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களும் செரு ப்பால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொது இடத்தில் தகாதமுறையில் நடக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×