search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ வழக்கு
    X

    திருமங்கலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ வழக்கு

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
    • திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராமுத்தாய் புகார் செய்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    மருத்துவ பரிசோதனைக்கு வந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியிலிருந்து சமூக நல அலுவலர் ராமுதாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், கர்ப்பமான சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அதில் அந்த சிறுமிக்கும், திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்த 17வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்ததும், 19-9-22 அன்று சிறுமியின் வீட்டில் வைத்து அவருக்கு அந்த சிறுவன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராமுத்தாய் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×