என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- மனமுடைந்த சபிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சபிதா (வயது 20). இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. சபிதாவின் கணவர் பெங்களூரில் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்கு சென்ற ராஜாவுக்கும் சபீதாக்கு செல்போன் மூலம் தகறாறு ஏற்பட்டது, இதனால் மனமுடைந்த சபிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அக்கம்ப க்கத்தினர் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்