தென்காசியில் காற்றில் பறக்கும் குப்பைகள்

வணிக வளாகங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் சாலை ஓரங்களிலேயே கொட்டப்படுகிறது.காற்றில் பறக்கும் குப்பைகள் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படும்.
தென்காசியில் காற்றில் பறக்கும் குப்பைகள்
Published on

தென்காசி:

தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரையை நோக்கி செல்லும் சாலைகளின் இருபுறமும் வணிக வளாகங்கள் அதிக அளவில் பெருகி உள்ள நிலையில் வணிக வளாகங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் குப்பைகள் அனைத்தையும் சாலை ஓரங்களிலேயே கொட்டி வருவதால் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி குப்பைகள் காற்றிலும் பறக்கின்றன. காற்று வேகமாக வீசும் பொழுது காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தென்காசி-மதுரை சாலையில் குத்துக்கல்வலசை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com