search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
    X

    மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

    • பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர்.
    • மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி.

    வடவள்ளி,

    கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதை யொட்டி காலை 5 மணிக்கு கோபூஜை நடந்தது. தொடர்ந்து 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 16 வகை வாசனை திரவியங்களால் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மலர் அலங்காரத்தில் சிறப்பு தோற்றத்தில் முருகப்பெ ருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் நடந்தது.

    இதையடுத்து திருக் கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 8 மணி அளவில் சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. புதிய யாக சாலை மண்டபத்தில் யாக பூஜை தொடங்கியது. கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப்பெருமானை நினைத்து காப்பு கட்டினர். மதியம் 12 மணிக்கு உச்சிக் கால பூஜை நடந்தது.

    கந்த சஷ்டி விழாவை யொட்டி வருகிற 19-ந்தேதி வரை தினமும் காலையிலும், மாலையிலும் யாக சாலை பூஜை மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது.

    18-ந்தேதி மதியம் 3 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சூரபத்மனை சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. மறுநாள் 19-ந்தேதி சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை திருக்க ல்யா ணம் திருக்க ல்யாண மண்ட பத்தில் நடக்கிறது.

    கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை மருத மலை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் துணை ஆணையர் ஹர்சினி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    மருதமலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ரூ.3.5 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது.

    இதன் காரணமாக கடந்த மாதம் 9-ந் தேதி முதல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கோவில் பஸ் உள்பட எந்த வாக னங்களும் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் படிக்கட்டு வழியாகவே மட்டுமே கோவிலுக்கு சென்று வந்தனர்.

    தற்போது சாலைப்பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் இன்று கந்தசஷ்டி விழாவும் தொடங்கியது. இதன்காரணமாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் உற்சாகத்துடன் வாகனங்களில் சென்று முருகனை வழிபட்டு வந்தனர்.

    Next Story
    ×