search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி  பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை
    X

    முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பாலபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

    • பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடியில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை 1008 பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா ஐப்பசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் மாலை 6:30 மணியளவில் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன் பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×