சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இந்த பணிக்காக சாலை தோண்டப்பட்டு குண்டு குழியுமாக 1 மாதமாக உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குழிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் முக்கியமான சாலையில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டபணிகள் நடந்தது. இந்த பணிக்காக சாலை தோண்டப்பட்டு குண்டு குழியுமாக 1 மாதமாக உள்ளது.

இந்த சாலையில் தான் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் மதுரை, ஈரோடு, திருச்சி செல்லும் பஸ்கள் செல்கிறது. தற்போது அந்தப் பள்ளங்கள் மரண குழிகளாக காணப்படுகிறது.இதில் இந்தக் குழியில் மோட்டார் சைக்கிள் வருபவர்கள் தெரியாமல் விழுந்து விடுகின்றனர்.

மேலும் சாலையில் பஸ்கள் புழுதியை கிளப்பி கொண்டு செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குழிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com