search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை சூலூரில் செல்லும் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் தண்ணீர்
    X

    கோவை சூலூரில் செல்லும் நொய்யல் ஆற்றில் நுரையுடன் செல்லும் தண்ணீர்

    • துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
    • இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர்.

    சூலூர்

    கோவை மாவட்டத்தின் முக்கிய நதிகளில் நொய்யல் ஆறு குறிப்பிடத்தக்கது. இது கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் வழியாக செல்கிறது. அதற்கு கோவையில் உள்ள சூலூர் பட்டணம், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் 2 தடுப்பணைகள் உள்ளன. நொய்யல் ஆற்றில் கழிவு நீர் அதிகம் கலக்கிறது. ஆகாயத்தாமரைகளும் நிறைந்து உள்ளது. எனவே நொய்யல் ஆற்றின் மேற்கண்ட 2 தடுப்பணைகளில் இருந்தும் வெளியேறும் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி பெருகி பறந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் கோவையில் உள்ள சூலூர், ராவத்தூர் தடுப்பணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக நுரை அதிகமாக செல்கிறது. இதனால் ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும், நுரை கலந்த நீர் உடம்பில் பட்டால், அலர்ஜி- அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    Next Story
    ×