search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே வீடு, பட்டறையில் தீ பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்
    X

    பட்டறையில் தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்ததை படத்தில் காணலாம்.

    ஒட்டன்சத்திரம் அருகே வீடு, பட்டறையில் தீ பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்

    • தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர்.
    • இருந்தபோதும் பட்டறையில் இருந்த இரும்பு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்பட ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை சாலையூர் நால்ரோடு பகுதியில் லட்சுமணன் (51) என்பவர் வீட்டின் அருகே பட்டறை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் லெட்சுமணன், அவரது மனைவி சுதாராணி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென மேற்கூரையில் தீ பற்றி மளமளவென பரவியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த லெட்சுமணன் குடும்பத்தினர் வீட்டை விட்டு அலறியடித்து ஓடினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் பட்டறையில் இருந்த இரும்பு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் வீட்டில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்பட ரூ.2 லட்சம் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின.

    இது குறித்து இடையகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது அப்பகுதியில் பட்டாசுகள் வெடித்ததால் தீ பற்றியதா? என விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×