search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டை மாரியம்மன்  கோவில் ஆடித்திருவிழா:   சேலம் மாவட்டத்துக்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை
    X

    கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: சேலம் மாவட்டத்துக்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை

    • அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல–கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 -ன் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3-ந்தேதி(சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×