என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை அருகே குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த தந்தை
- உணவுக்காக 2 குழந்தைகளும் அழுது கொண்டே இருந்தது. ஆனால் தந்தை குழந்தை க்கு உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
- குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி குல்லலக்கு ண்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது30). இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தேவி (23). இவர்க ளுக்கு காமாட்சி (3) மற்றும் 6 மாத பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர்.
நாகராஜீக்கு சரிவர வேலை இல்லாததால் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டு வந்தனர். இதனால் குழந்தைகளுக்கு சரிவர உணவு கொடுக்க முடியவில்ைல. கைக்குழ ந்தைக்கு பால்கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தாய் மற்றும் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் உணவுக்காக 2 குழந்தைகளும் அழுது கொண்டே இருந்தது. ஆனால் நாகராஜ் குழந்தை க்கு உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவ்வப்போது குழந்தை களுக்கு உணவு கொடுத்து வந்தாலும் நாகராஜ் தனது இயலாமையை போக்க குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்காததால் 3 கிலோ எடையில் இருந்து குறைந்து எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு மெலிந்து போனது. இதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சமூக நலத்துறை அதிகாரி புஷ்பகலா, குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், தாசில்தார் தனுஷ்கோடி, அமையநாயக்கனூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் நோய்வாய்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட குழந்தைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால் குழந்தை களை எடுத்துச் செல்ல விடாமல் தகராறு செய்த தேவி தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அதிகாரிகள் அவர் மீது தண்ணீர் ஊற்றி ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் குழந்தை களுக்காகவும், உனது ஆரேக்கியத்துக்காகவும் காப்பகத்தில் சேர்த்து உதவ இருப்பதாக தெரிவித்தனர்.
அதன்பிறகு தேவி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் வேனில் ஏற்றிச் சென்றனர். குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த நாகராஜை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்