

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பகுதியில் வாழும் இந்து அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தி ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் ராமன் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் ராமனிடம் பட்டா வழங்குவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பட்டா வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதை அறிந்த நிலக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜூக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் போராட்டம் நடத்திய ராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.