search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - அதிகாரி அறிவிப்பு
    X

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - அதிகாரி அறிவிப்பு

    • பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலு வலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    பாரம்பரிய காய்கறிகள்

    பாரம்பரிய காய்கறி கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிக ளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பம் செய்ய லாம். பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    தோட்டக்கலைத்துறை இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in/ மற்றும் மாவட்ட அலு வலகங்களில் விவசா யிகளின் இதற்கான விண்ணங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப் பங்களை கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் அல்லது மாவட்ட தோட்டக்கலைத்துறை அலு வலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண்வள மேம்பாடு மற்றும் அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதுக்கு தேர்வு செய்யப் படுவார்கள்.

    இதில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட கலெக்டர் அறிவிப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் விழாக்களின் போது இதற்கான சான்றிதழ் மற்றும் வங்கி வரவோலை, விருது வழங்கப்படும். இதில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும் , 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×