search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி வார சந்தைகளில்,   வியாபாரிகள் சேற்று நீரை நிரப்பி, விற்பனை செய்வதால் ஆடுகள் மரணம்  விவசாயிகள் கோரிக்கை
    X

    இறந்த ஆட்டை படத்தில் காணலாம்.

    தருமபுரி வார சந்தைகளில், வியாபாரிகள் சேற்று நீரை நிரப்பி, விற்பனை செய்வதால் ஆடுகள் மரணம் விவசாயிகள் கோரிக்கை

    • ஆடுகளின் எடை கூடுவதற்கு சேற்று தண்ணீரை கால்நடைகளுக்கு வலு கட்டாயமாக குடிக்க வைக்கின்றனர்.
    • விவசாயிகள் ஆடுகளை வாங்கி சென்ற 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர், மொரப்பூர், பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த வார சந்தைகளில் விவசாயத்திற்கு தேவையான விவசாய பொருட்கள், மளிகை பொருட்கள் காய்கறி வகைகள், ஆடு, மாடு, கோழி, உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் பசு மாடுகள் பால் உற்பத்திக்காகவும் காளை மாடுகள் விவசாய பயன்பாட்டிற்காகவும் அதிகபடியாக விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். அதேபோல் ஆடுகள் வளர்ப்புக்காகவும் இறைச்சிக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட வாரச்சந்தைகளுக்கு சேலம், கிருஷ்ணகிரி, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருகின்றனர்.

    விவசாயிகள் அதிகமாக வளர்ப்பிற்கு செம்மறி ஆடு, வெள்ளாடு, குறியாடு, உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்கிச் செல்லும் ஆடுகள் 4 மணி நேரத்தில் திடீரென இறப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது நம் மாவட்டத்தில் முக்கியமாக காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி ,உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகளை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் வாங்கிச் செல்லும் ஆடுகள் திடீரென துடிதுடித்து இறந்து போகிறது.

    வியாபாரிகள் விவசாயிகள் இடத்தில் நேரடியாக சென்று ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் ஆடுகளை லாப நோக்கத்திற்காக, ஆடுகளின் எடை கூடுவதற்கு சேற்று தண்ணீரை கால்நடைகளுக்கு வலு கட்டாயமாக ஊற்றி வார சந்தைகளுக்கு கொண்டு வருவதால் ஆடுகளின் எடை கூடி புஷ்டியாக தெரிவதால் விவசாயிகளிடத்தில் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இவ்வாறு வாங்கிச் செல்லும் விவசாயிகள் வீட்டுக்கு சென்ற 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போகிறது. அதே போல் பாப்பாரப்பட்டி வார சந்தையில் கடந்த வியாழக்கிழமை விவசாயி வாங்கி சென்ற ஆடு 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போனதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    வியாபாரிகள் தங்களுடைய சொந்த லாப நோக்கத்திற்காக கால்நடைகளை சித்திரவதை செய்து விற்பனை செய்து வருபவர்கள் மீது கால்நடை துறையும், விலங்கின ஆர்வலர்களும் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×