search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு

    • தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரணயம் ஒன்றியத்தில்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்படுத்தப்படும் ஊராட்சிகளான வாய்மேடு, பஞ்சநதிகுளம்கிழக்கு, பிராந்தியங்கரை, தகடூர் ,தேத்தாக்குடிதெற்கு ஆகிய கிராமங்களில் வேளாண்மை இடுபொருள்கள் சிறப்பு திட்டங்களாக வேளாண் கருவிகள் தொகுப்பு தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும் பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். உடன் வேளாண்மை அலுவலர்கள் அனிஷ், நவீன்குமார் இருந்தனர்.

    Next Story
    ×