search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே புடலங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    நிலக்கோட்டை அருகில் உள்ள என்.ஊத்துப்பட்டியில் புடலங்காய் அதிக அளவில் விளைந்துள்ளது.

    நிலக்கோட்டை அருகே புடலங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மகசூல் அதிகரித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • வரும் காலங்களில் விலை சற்று உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் பூக்கள் சாகுபடி மற்றும் பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை பகுதியில் மழை பெய்து வந்தாலும் இன்னும் விவசாயப் பணிகளை தீவிரமாக தொடங்கவில்லை. இருப்பினும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு என்.ஊத்துப்பட்டி, தம்பிநாயக்கன்பட்டி, கோட்டூர் , மைக்கேல் பாளையம், சங்கால்பட்டி, பிள்ளையார் நத்தம், சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் புடலங்காய் சாகுபடி செய்தனர்.

    தற்போது புடலங்காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மகசூல் அதிகரித்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி தெரிவிக்கையில்,

    புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இந்த புடலங்காய் சாகுபடி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். வரும் காலங்களில் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    Next Story
    ×