search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி  விவசாயி பலி
    X

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி

    • ராஜபாண்டியன் பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • கிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த வர் ராஜபாண்டியன் (40)விவசாயி. இவர் நேற்று இரவுதாழம்பட்டி லிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பண்ருட்டி -கும்பகோ ணம் சாலை பணிக்கும் குப்பம் அருகே வந்து கொண்டி ருந்தபோதுபண்ருட்டியிலிருந்துசாத்திப்பட்டு சென்றுகொண்டிருந்த

    மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜபாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த ராஜபாண்டியன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் தெரிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஏட்டு கோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×