search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண் சிகிச்சை முகாம்
    X

    கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    கண் சிகிச்சை முகாம்

    • மேல் சிகிச்சைக்கு 10 நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
    • முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலசங்கம் கூட்டமைப்பு , பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை, ஐ கேர் ஆப்டிகல்ஸ் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

    . இந்த முகாமிற்கு கூட்டமைப்பு தலைவர் சாமி செல்வம், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பொருளாளர் உதயகுமார், கவுரவத் தலைவர் இளமுருகசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்புச் செயலாளர் பாபு வரவேற்றார்.

    இந்த முகாமில் ஆண் பெண் என 150 க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு கண்களுக்கு விழி ஒளி பரிசோதனை, சர்க்கரை நோயினால் வரும் விழித்திரை பாதிப்பு, தலைவலி, கண் புரை, கண் உறுத்தல், வீக்கம், கண் எரிச்சல், நீர் வடிதல், வழி திரை பாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு அட்வான்ஸ் ஆட்டோ ரிப்ரஷன் இயந்திரம் மூலம் கண்ணை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். மேல் அறுவை சிகிச்சைக்கு 10 நபர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முகாமில் பாதி விலையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், சமூக சேவைகி பத்மா, மேலாண்மை குழு உறுப்பினர் அப்பர் சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான குடியிருப்பு நல சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் நெறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்

    Next Story
    ×