search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அக்.31ந் தேதி வரை அனுமதி நீட்டிப்பு
    X

    இடுக்கி அணை (கோப்பு படம்)

    இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அக்.31ந் தேதி வரை அனுமதி நீட்டிப்பு

    • இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணை உள்ளது. ஆர்ச் வடிவிலும் அதன் அருகே செருதோனி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டபோதிலும் தண்ணீர் ஒன்றாக தேங்கு கிறது. மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்டது.

    ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை காண அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஆக.31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஓணம், தசரா பண்டிகைகள் நெருங்குவ தால் இடுக்கி அணையை காண சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டு ள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை கண்டு ரசிக்க லாம். நுழைவு கட்டணம் ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. காமிரா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரண மாக புதன்கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×