search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு  - 31ம் தேதி வரை நீட்டிப்பு
    X

    10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு - 31ம் தேதி வரை நீட்டிப்பு

    • 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.
    • வரும் 31ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இதனிடையே ,10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×