என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வங்கதேசத்தவர்களை வெளியேற்ற வேண்டும் - இந்து அமைப்புகள் வலியுறுத்தல்
- நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.
- பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர், கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூர், கோவை மாவட்டத்தில் பின்னலாடை, பஞ்சாலை, விசைத்தறி, கிரைண்டர் உற்பத்தி, கட்டட கட்டுமானப்பணி, சென்ட்ரிங் மற்றும் டைல்ஸ், கைத்தறி, நுால்தயாரிப்பு, தங்கநகை தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் வடமாநிலத்தவர்களுடன், வங்கதேசத்தவர்களும் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டையோ, பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் இல்லை. இங்குள்ள பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர். அதோடு துப்பாக்கி கலாசாரம், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கண்காணிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அனுமன்சேனா, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்