search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் கோவில்பட்டியில் தனியார் பாருக்கு  கலால் துறை அதிகாரிகள் சீல்
    X

    தனியார் பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    நத்தம் கோவில்பட்டியில் தனியார் பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல்

    • உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து கலால் துறை அதிகாரிகள் தனியார் மது பாருக்கு சீல் வைத்தனர்.

    நத்தம்:

    நத்தம் கோவில்பட்டியில் தனியார் கிளப்பில் மதுபான பார் உள்ளது. அது தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டத்தின் கீழ் எப்.எல்.2 உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் தனியார் மதுபாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து கலால்துறை ஆணையாளர் விஜயா, கலால் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மதுபான பாரை பூட்டி சீல் வைத்தனர்.

    Next Story
    ×