search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் திருட்டு
    X

    தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் திருட்டு

    • ரவி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஜன்னல் கம்பியை உடைத்து அறைக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரவி (54) என்பவர் உள்ளார்.

    ரவி தனது அறையில் உள்ள பீரோவில் ரூ.60 ஆயிரம் பணத்தை நேற்றுமுன்தினம் வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை மீண்டும் அறைக்கு வந்த ரவி மதியம் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவின் பின்பகுதியில் இருந்த ஜன்னலை பார்த்தபோது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்ப தை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இரவில் வந்த மர்ம நபர் ஜன்னல் கம்பியை உடைத்து அறைக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பெருந்துறை அடுத்த துடுப்பதி ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் கவின் (31). நேற்று மதியம் கவின் தனது குடும்பத்து டன் தோட்டத்து வீட்டிற்கு சென்று விட்டார்.

    அப்போது கவின் வீட்டிற்கு 3 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ள னர். கவின் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் 3 மர்ம நபர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அந்த 3 அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கவினுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. இதேபோல் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கவின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பணம் பொருட்கள் திருடப்பட வில்லை என்பது தெரிய வந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×