search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளி கடையில் தீ விபத்து
    X

    ஜவுளி கடையில் தீ விபத்து

    • பெருந்துறையில் மின் கசிவு காரணமாக ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வர் வசந்தகுமார் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு கடைக்குள் இருந்து புகை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வசந்த குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் கடையின் முன் பகுதியில் இருந்த துணிகள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

    Next Story
    ×