search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி படுகாயம் அடைந்த 2 மாணவிகளுக்கு அறுவை சிகிச்சை
    X

    வேன் மோதி படுகாயம் அடைந்த 2 மாணவிகளுக்கு அறுவை சிகிச்சை

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவிகளுக்கு கை மற்றும் கால களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
    • 2 மாணவிகளுக்கும் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் ரோட்டில் நேற்று மாலை ஒரு ஈச்சர் வேன் வந்தது. இந்த வேனை மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (28) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் அந்த லாரி கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதாமல் இருக்க வேனை டிரைவர் திருப்பினார்.

    அப்போது எதிர் பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவ- மாணவிகள் மீது வேன் மோதியது. தொடர்ந்து வேன் அருகே இருந்த தடுப்பு கல்லை உடைத்து கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    வேன் மோதியதில் கணக்க ம்பாளையத்தை சேர்ந்த 12-ம் மாணவிகள் நந்தினி வித்யா பாரதி (17), கனி மொழி (17) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில் மாணவி நந்தினி வித்யா பாரதிக்கு வலது கை மற்றும் 2 கால்களிலும் எலும்பு முறிவும், கனிமொழிக்கு இடது கால் தொடையில் காயமும், தலையில் ரத்த காயமும் ஏற்பட்டது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு கோபிசெட்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதையடுத்து டிரைவர் கண்ணன் தப்பி ெசல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் அவரை மடக்கி பிடித்து பங்களா ப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வேன் டிரைவர் மற்றும் உரிமை யாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேன் டிரைவர் கண்ணன் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவி களுக்கு கை மற்றும் கால களில் எலும்பு முறிவு ஏற்ப ட்டுள்ளது.

    இதையடுத்து 2 மாணவிகளுக்கும் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×