search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை
    X

    ரெயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை

    • பட்டாசுகளை ரெயில்களில் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

    ஈரோடு, அக். 18-

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதையொ ட்டி, ரெயில்க ளில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு பண்டி கைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு மார்க்கமாக செல்லும் ரெயில்களில் பட்டாசுகள் விற்பனைக்காகவோ அல்லது சொந்த பயன்பாட்டி ற்காக பார்சல் மூலம் அனுப்பி வைக்கின்றனரா? என ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீ சாரும், ஈரோடு ரெயில்வே போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

    இது குறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் கூறியதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசுகளை விற்பனை க்காக கொண்டு செல்கின்றனரா? என ஓடும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்களில் சோத னை அதிகரித்து ள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பகுதியில் பட்டாசுகள் கொண்டு செல்கின்றனரா? பயணி களின் உடமைகளை சோதனை செய்த ரெயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதி ப்போம்.

    மேலும் ரெயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படு த்த உள்ளோம்.

    பயணிகள் பட்டாசுகளை ரெயில்களில் எடுத்து சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் ரெயில்வே தண்டவாளத்தில் கவன க்குறைவாக கடக்கும்போது ரெயில் மோதி இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதால் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×