search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை நிலவரம்
    X

    பவானிசாகர் அணை நிலவரம்

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • பவானிசாகர் அணையிலிருந்து 805 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உ ள்ளது பவானிசாகர் அணை.

    105 கொள்ள ளவு கொண்ட பவா னிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று மழை பெ ய்ததால், இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 83.32 அடி யாக உள்ளது. அணை க்கு வினாடிக்கு 2,289 கன அடியாக நீர் அதிகரித்து வருகிறது.

    பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்துக்கு 500 கனஅடியும், காலிங்கராயன் பாசனத்துக்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானிக்கு 5 கனஅடி என மொத்தம் 805 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×