search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை நிலவரம்
    X

    பவானிசாகர் அணை நிலவரம்

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளது.
    • அணைக்கு 2,872 கனஅடி நீர்வரத்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதார மாகவும் உள்ளது பவானி சாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகு தியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொட ர்ந்து அதிகரித்து வந்தது.

    பின்னர் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளது. அணைக்கு 2,872 கனஅடி நீர்வரத்து வருகிறது.

    அணையில் இருந்து காலி ங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்தி ற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி,

    கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×